மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சூதாட்டத்திற்கு அடிமையானார்.

இதனால் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்தார். அந்த கடனை அடைப்பதற்காக தனக்கு பணம் கொடுத்த நண்பர் ஒருவருடன் உடலுறவு கொள்ளுமாறு என்னை எனது கணவர் கட்டாயப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து எனது கணவரின் நண்பரும் அடிக்கடி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த பெண்ணின் கணவர் தனது நண்பரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைப்பதற்காக தனது மனைவியை நண்பருக்கு விற்றதாக தெரிகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு அந்த நபரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் கணவர் மற்றும் அவரது நண்பரை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.