உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் சொப்னா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி நரேந்திர சவுகான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 4 லட்சம் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை பரிசாக கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சொப்னா தன் கணவனுடன் கோட்வாலி கிராமத்தில் வாழ்ந்தார். இந்நிலையில் சொப்னாவிடம் கணவனும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சனை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அதன்படி ஒரு புல்லட் பைக் மற்றும் கூடுதலாக 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் வேண்டும் என்று அந்த பெண்ணை டார்ச்சர் செய்த நிலையில் நேற்று முன்தினம் பெண்ணை கொலை செய்துவிட்டனர்.

அந்தப் பெண்ணின் கணவர் நரேந்திர சவுகான், அவரது அண்ணிகள் பூஜா தேவி, ரீனாதேவி மற்றும் சகோதரி தேவி ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்துவிட்டனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை அவர்கள் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடிய நிலையில் போலீசார் விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திர சவுகான் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கைது செய்துள்ள நிலையில் நரேந்திர சவுகான் ஆகிவிட்டதால் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.