
இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்கு பிறகு நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம்தோறும் 5000 ரூபாய் பெறலாம். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள். இதில் 60 வயதை அடையும் வரை மாதம்தோறும் 210 செலுத்தி வந்தால் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.