பீஹாரின் மோத்திகரி மாவட்டத்தில் உள்ள சக்கியா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சக்கியா ரயில் நிலையத்தில் இருந்து பாட்டிலிபுத்திராவை நோக்கி செல்வதற்கான 15556 ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்மணி, கால் தவறி ரயிலின் கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் பணியில்  இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் ஜெயபிரகாஷ் யாதவ் விரைந்து சென்று, அந்தப் பெண்ணை மீட்டார்.

பின்னர், அந்தப் பெண்ணை மீண்டும் பாதுகாப்பாக ரயிலில் ஏற்றி, பாட்டிலிபுத்திராவிற்கு அனுப்பினார். இந்த மனிதநேய செயலைப் பாராட்டும் வகையில் RPF வீரருக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பில் RPF வீரர்கள் தொடர்ந்து மேற்கொள்கின்ற தொண்டுப்பணிகள், ரயில்வே துறையின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.