
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்ததோய் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ராகுல் -அனிதா. அனிதா ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று சகோதரனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இதனை விரும்பாத அந்தப் பெண்ணின் கணவர் ராகுல் எங்கும் செல்லக்கூடாது என தடுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த ராகுல் தனது மனைவியின் மூக்கை வெட்டியுள்ளார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.