தமிழகத்தில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆகஸ்ட் 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை -செங்கல்பட்டுக்கு இரவு 10.50 மணிக்கு, செங்கல்பட்டு -நெல்லைக்கு வருகின்ற ஆகஸ்ட் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு இயக்கப்பட உள்ளன. அதனைப் போலவே நாகர்கோவில் மற்றும் தாம்பரத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு, தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.