இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வரும் ரயில்வே நிர்வாகம் தாய்மார்களின் பயணம் வசதியாக இருக்கும் வகையில் குழந்தைகளுக்கான பேபி பெர்த் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தின் போது தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இதில் தூங்க வைக்கலாம். இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்ய சபாவில் தெரிவித்தார். இது ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.