ஸ்விட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் அறிவிப்பு பலகைகள் திடீரென வேலை செய்யாமல் போனதாகவும் மேலும் சில பலகைகள் தவறான தகவல்களை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்தப் பிரச்சனை ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. அதில் “பயணிகள் ரயில்கள் குறித்த தகவலை பெறுவதற்கு தங்களின் தொலைபேசியில் உள்ள ஆப்களை பயன்படுத்த வேண்டும். இந்த பிரச்சனை ஏற்பட்டதற்கு காரணம் ஓவர் லோட் தான். மேலும் இது விரைவில் சீர் செய்யப்படும்” என்று சுவிஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த பிரச்சனை இரவு 8 மணிக்கு ஸ்விஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் சரி செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் திடீர் பிரச்சனை…. இதுதான் காரணமாம்…. சுவிஸ் பெடரல் ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…
Read more