மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் 2025 தொடரின் எலிமினேட்டர் சுற்றில், ராய்காட் ராயல்ஸ் அணி மற்றும் கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகள் புனேவில் வெள்ளிக்கிழமை மோதின. இந்த போட்டியில், ராய்காட் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அவர்கள் தற்போது குவாலிஃபையர் 2 சுற்றில் புனேரி பாப்பா அணியை எதிர்கொள்ள உள்ளனர். குவாலிஃபையர் 1 சுற்றில் புனேரி பாப்பா, நாசிக் டைட்டன்ஸ் அணியிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தின் போது ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சி நடைபெற்றது. ராய்காட் அணியின் இரு வீரர்கள் ரன் எடுக்க முயன்ற போது, ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு மைதானத்தின் நடுவே விழுந்தனர். அந்த தருணத்தில் எளிதாக ரன் அவுட் செய்ய முடியும் சூழல் இருந்த போதிலும், கோலாப்பூர் அணியின் கீப்பர் பந்தை பந்து வீச்சாளரிடம் வீசினார். அவர் தடுமாறி தவற விட்டார். பின்னர் ராகுல் திரிபாதி பந்தை கைப்பற்றினாலும், நேரடியான அழுத்தமான துல்லியத்தில் ஸ்டம்புகளைத் தவறவிட்டார். பந்து நேராக பவுண்டரி வரை சென்றுவிட்டது.

இந்த காட்சி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. கமெண்டேட்டரும் அதிர்ச்சியில், “இதில் ஆராய நிறைய விஷயங்கள் உள்ளன!” எனவும் பதறினார். போட்டி முழுக்க பரபரப்பாக இருந்தது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.