
தேனி மாவட்டத்திலுள்ள குமணன்தொழு பகுதியில் சென்றாய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் சென்றாய பெருமாள் மலையடிவாரத்தில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவு நேரம் சென்றார். அப்போது திடீரென வந்த கரடி சென்றாய பெருமாள் மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மறுநாள் காலை சென்றாயபெருமாள் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.