
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா பங்கேற்றார்.
அவர் ரத்த தானம் செய்வதுபோல கையை மட்டும் காண்பித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. ரத்த தானம் செய்து ஜெயசுதா முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது. ஆனால் வீடியோவுக்காக மட்டும் ரத்த தானம் செய்வது போல கையை மட்டும் காண்பித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இது குறித்து அதிமுக செயலாளர் ஜேசுதா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். நான் 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக் கூடாது என கூறிவிட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை. நான் ரத்ததானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? என விளக்கம் அளித்துள்ளார்.