
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏலம் தொடர்ந்தது. இந்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பற்றி தற்போது பார்ப்போம். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் 5 வீரர்கள் வரை தக்க வைத்திருந்தது. அதன்படி எம்.எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பத்திரனா ஆகிய 5 வீரர்கள் தக்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மற்றும் இன்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பற்றி பார்ப்போம். அதன்படி சென்னை அணி ஏலத்தில் அஸ்வினை வாங்கியது. அதன் பிறகு நூர் அகமது, டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரி பாதி, விஜய் சங்கர், ஷாம் கரண், அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும் இதேபோன்று தீபக் ஹூடா, முகேஷ் சவுத்ரி, ஷேக் ரஷீத், நாதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், கமலேஷ் நாகர்கோடி, ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பீடி மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது.