
ஆன்லைனில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. இந்த நிலையில் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்த்து ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஒரு கோடியை 65 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி கும்பல் கம்போடியா நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் நூதனமாக நாடகம் ஆடி குற்றவாளிகளான முகமது இஸ்மாயில், அபுதாஹிர், கேசவராஜ், கலில் அகமது ஆகியோரை இந்தியாவுக்கு வரவழைத்தனர். பின்னர் நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.