
இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அரசியல் என்பது பெரிய கடல் போன்றது. அதனை நீந்தி கடந்தவர்களும் உண்டு மூழ்கி போனவர்களும் உண்டு. விஜய் நீந்தி கடக்கிறாரா இல்லை மூழ்கி போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் பிளவு வாத அரசியல் கலாச்சாரம் என விஜய் குறிப்பிட்டார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் கூறியதற்கு பொருத்தமான காட்சிகள் பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் என கூறியுள்ளார்.