
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி அவதூறாக பேசுகிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் பிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அவர்கள் சீமான் தன்னை விட வேறு யாரும் கட்சியில் வளரக்கூடாது என்று நினைப்பதாகவும் மற்றவர்களுக்கு எந்த விதமான முக்கியத்துவமும் இருக்கக் கூடாது என்று கருதுவதாகவும் கூறினார்.
இது பற்றி சீமானிடம் கேட்டால் என்னை விட யாரும் வளரவில்லை என்று கூறுகிறார்களே தவிர கட்சி வளரவில்லை என்று யாரும் கூறுவதில்லை என்றார். அதன் பிறகு பிரபாகரன் வந்து சொன்னால் கூட நான் பெரியாரை ஏற்க மாட்டேன் எனவும் பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் கட்சியை விட்டு தாராளமாக விலகி செல்லலாம் என்றும் கூறினார். இந்நிலையில்செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் ஆவேசமாக பேசும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு அவர் பேசுவதற்கு பதிலாக நாய் குரைப்பது போன்று எடிட் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram