திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதேபோன்று திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கணபதிபாளையம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகளும் இதே போன்று இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து தாங்கள்தான் கெத்து என்ற வகையில் பதிவுகளை போட்டுள்ளனர்.

இந்த சமூக வலைதள போட்டி ஒரு கட்டத்தில் பெரும் சண்டையாக மாறிய நிலையில் திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் 50 பேர் கணபதிபாளையம் பகுதிக்கு பேருந்தில் சென்றனர். அங்குள்ள அரசு பள்ளியின் முன்பாக மாணவிகள் அனைவரும் தகராறு ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் சாலையே போர்க்களமாக மாறியது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dinamalar (@dinamalardaily)

சில மாணவிகள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டும் சில மாணவிகள் முகத்தை மறைக்காமல் அப்படியே சண்டை போட்டதும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாணவிகளின் அடிதடியால் அந்த இடமே போர்க்களமாக மாறிய நிலையில் மக்கள் அதிர்ந்து போய்விட்டனர். இந்த சண்டையை தடுக்க வந்தவர்களிடமும் மாணவிகள் தகராறு செய்த நிலையில் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளை விலக்கியதோடு பிரச்சனையில் ஈடுபட்ட அனைத்து மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.