
இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜூன் 17 நாளை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொகரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.