திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். இந்த காதல் விவகாரம் அவர்கள் இருவரின்  குடும்பத்தினருக்கும்  தெரிய வந்தது.

இதையறிந்த அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என்பதால் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அந்த வாலிபர் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த 12-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அதிகாரிகள், காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் காவல்துறையினர்  சிறுமி மைனர் என்பதால் இத்திருமணம் செல்லாது என்றனர். மேலும் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதோடு, அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த சிறுமியை கோர்டில் ஆஜர் படுத்த  உள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.