தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக  வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மேக்கப் இல்லாமல் நடிப்பது குறித்து சாய்பல்லவி விளக்கம் அளித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், என்னுடைய முதல் படமான பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தேன். பார்வையாளர்கள் அதை ரசித்தனர். அது எனது நம்பிக்கையை அதிகரித்தது. அதனால் தான் மேக்கப் இல்லாமல் நடிக்க விரும்புகிறேன். இயக்குனர்கள் கூட இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தவில்லை என்று சாய்பல்லவி கூறியுள்ளார்.