மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்வே காவல்துறையினர் ஒரு சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 15 வயது சிறுவன் மற்றும் அவனுடைய பாட்டியை திருட்டு வழக்கில் ரயில்வே காவல்துறையினர் விசாரிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

அந்த சிறுவனுக்கு 15 வயது ஆகும் நிலையில் முதலில் அவனுடைய பாட்டியை அடித்து தாக்கினர். பின்னர் சிறுவனையும் அடித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுவன் கூறும்போது என்னுடைய அப்பா எங்கே என்று கேட்டு என்னையும் என் பாட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் பின்னர் அங்கு வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளான். அதோடு என்னுடைய அப்பா கூலி தொழிலாளி தான் என்றும் கூறினான்.

அந்த வீடியோவில் பெண்ணை பெல்டால் அடிக்கும் காட்சிகளும் தலைமுடியை இழுத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகளும் இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கட்னி எஸ்பி கூறியுள்ளார். அதோடு இது பழைய வீடியோ என்றும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து முன்னாள் முதல்வர் கூறும்போது தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.