
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.
எனவே அணையில் இருந்து 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்பதால் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
