
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதிய உறுப்பினர்களை கட்சியின் சேர்த்தல் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை கட்சியில் சேர்த்தல் ஆகிய பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த விழாவின்போது மாற்றுக் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு முருகனின் வேல்-ஐ பரிசாக கொடுத்தனர். மேலும் இது பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இன்றைய தினத்தில் எனக்கு முருகனின் வேல் பரிசாக வழங்கப்பட்டு என்னுடைய கைகளில் வந்துவிட்டது என்று கூறினார். அதாவது முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சு என்றார்.