
குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அண்மையில் மும்பை நகரத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மரக் குச்சியை பேட்டாக பயன்படுத்திய பட்லர், சில அழகான ஷாட்களை ஆடியதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது பங்கேற்பால் அந்த பகுதியில் சிரிப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை உருவானது.
Jos Buttler is practicing with kids in India.
That’s really sweet gesture by him.😂❤️ pic.twitter.com/nbOb300Cy1— Brookýý 🏴 (@88Brooky) May 7, 2025
இந்த தன்னிச்சையான நிகழ்வு, பட்லரின் விளையாட்டுத்தனமான மனப்பான்மையையும், ரசிகர்களுடன் அவர் வைத்திருக்கும் தனித்துவமான உறவையும் வெளிக்கொணர்ந்தது. குழந்தைகளுடன் நேரடியாக கலந்துக்கொண்டு விளையாடியதும், அவர்கள் நினைவில் நிலைத்து நிற்கும் சிறப்பான தருணமாக மாறியுள்ளது. கிரிக்கெட்டின் மீது அவர் கொண்ட அன்பும், அதனை மற்றவர்களுடன் பகிரும் மனப்பான்மையும் பாராட்டுக்குரியது என நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.