
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் என்ற பெருமைக்குரிய ஃபாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.
ஃபாத்திமா பீவி மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தவிர மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.