
பாகிஸ்தான் நாட்டின் வானிலை ஆய்வு மையத்தினர் இந்த வருடத்தின் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என அறிவித்திருந்தனர். அந்த வகையில் வானிலை ஆய்வு மையத்தினர் கூறியபடியே பாகிஸ்தானில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கைபர், பக்துவா, சிந்து மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் அதிகமான கனமழை பெய்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று வரையில் 38 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 63 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடர்ந்து நீடிக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு மீட்பு குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.