சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் கோவிலை பொருத்தவரை நேற்று அங்கு பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் மற்றும் மொழிவாதம் என்ற பிரச்சனையையும் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்த நினைத்துள்ளனர். வடமாநிலங்களில் வேண்டுமென்றால் இதற்கான சாத்திய கூறுகள் அமையக்கூடும். தமிழக பாஜக தலைவர் மற்றும் எச் ராஜா ஆகியோருக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கின்றார்.

வடமாநிலங்களை போன்று தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிமிக்க முதல்வர். அவர் ஒரு இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கின்றார். எனவே பெரியார் மண்ணில் இந்த திராவிட மண்ணில் திராவிட திருநாட்டில் இது போன்ற சம்பவத்தை ஒருபோதும் முதல்வர் அனுமதிக்க மாட்டார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து அரசியல் குளிர் காய என்ன பிரச்சனையை கையில் எடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த அரசு நீதிமன்றம் என்ன வழிகாட்டுகின்றதோ அதன்படி தான் செயல்படும் என சேகர் பாபு பேசியுள்ளார்.