தமிழக மக்களையும் விவசாயிகளையும் திமுக அரசு ஏமாற்றி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுக்கொரு சதவீதத்தை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு என பொதுமக்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி என ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று நான்கு வருடங்களைக் கடந்தும் தற்போது வரை பயிர் கடனை ரத்து செய்யாமல் விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் செய்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.