
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சமூகவலை பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திமுக அரசின் ஆட்சி காலத்தில் தினமும் தலைப்பு செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகள் மிக இயல்பாக நடப்பது தான் அவர்களின் 3 ஆண்டு சாதனை. திமுக முதலமைச்சர் வெளிநாட்டில் இருக்கிறார் அவர் கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்துகிறார்.
ஆனால் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒரு முறையாவது கேட்டறிந்தாரா? பிரதான பணிகளை மறந்து விட்டு வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பின்னோக்கி தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடுமையான கண்டனம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலை சட்டம் ஒழுங்கு சீரழிகிறது. அதை இனியாவது பேணிக்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.