விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இவர்  சமீபத்தில் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளார். அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அரசு பள்ளியில் சத்துணவு முட்டை  கேட்டதற்காக ஐந்தாம் வகுப்பு மாணவனை சத்துணவு பணியாளர் துடைப்பதால் விரட்டி அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

இது குறித்து நிஷா கோபமாக பதிவிட்டுள்ளார். அதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் சத்துணவு ஊழியரால் தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது, ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்கள் நல்வழிக்காக.. இவர்கள் எப்படி மாணவன் மீது கை வைக்க முடியும்? யார் கொடுத்த உரிமை? மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அந்த பணியாளர்களை பணி நீக்கம் மட்டுமல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கொந்தளித்துள்ளார்.