
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் பகுதியில், காளைகள் தாக்குதலால் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜூன் 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
नाशिकच्या कळवण इथं मोकाट जनावरांचा हल्ला, या हल्ल्यात एक व्यक्तीचा जागीच मृत्यू pic.twitter.com/uzJW8mM3gz
— News18Lokmat (@News18lokmat) June 23, 2025
உயிரிழந்தவர் பால்சந்திர ரகுநாத் மால்புரே (வயது 79) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வழக்கம்போல சாலையில் நடந்து சென்றபோது, இரண்டு காளைகள் திடீரென அவரை முட்டியது. அருகிலிருந்த பொதுமக்கள் குச்சிகளை எடுத்துக்கொண்டு விரட்ட முயன்றும், காளைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. அதில் மற்றொரு நபரும் காயமடைந்தார்.
மால்புரே அடிபட்ட கடுமையான காயங்களுடன் உடனடியாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், தெருவில் கட்டுப்பாடின்றி சுற்றிவரும் விலங்குகள் பொதுமக்கள் உயிருக்கு எவ்வளவு அபாயமாக இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து, நாசிக் மாநகராட்சி மற்றும் பசு பாதுகாப்பு அமைப்புகள் மீது பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெருவில் சுற்றும் ஆடம்பரமிக்க எருதுகளை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.