
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தருவதற்கு மத்திய அமைச்சரவையில் உள்ள முக்கிய இலாகாக்களை JDU, தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளும் கேட்கின்றன. மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் கேட்பதால் பாஜக கடும் அதிர்ச்சியில் உள்ளது.