மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருப்பவர் அபு ஆஸ்மி‌‌. இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் முகலாய மன்னர் ஔவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று கூறினார். அவரை நான் ஒரு கொடூரமான மற்றும் சகிப்புத்தன்மை அற்ற ஆட்சியாளராக நினைக்கவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்களின் மூலம் ஔவுரங்கசீப்பின் பிம்பம் சிதைக்கப்படுகிறது. அவர் பல கோவில்களை கட்டிய நிலையில் அவருடைய படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று கூறினார்.

இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சட்டசபை கூட்டத்தின் போது கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவரை சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் அவருடைய இந்த கருத்துக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் கூட கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.