தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கூறியதாவது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியுள்ளார். மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுக்க தேவையான தூதரக வழிமுறைகளை செய்ய வலியுறுத்தியும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.