தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒவ்வொரு மாதமும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனை அளிப்பதாக முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.