
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழையும், தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இதேபோன்று வருகின்ற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.