கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் இன்னும் வெள்ள நீரில் இருந்து மீண்டு வராமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஆனால் அது உண்மை இல்லை. வானிலை மாடல்கள் குறித்து தெரியாமல் யாரோ இது போன்ற செய்தியை பரப்பி வருகின்றனர். இது போன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் மக்களும் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.