சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திரபிரஸ்தா காலனியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், துர்நாற்றம் வீசுவதாக புகாரளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஒரு வெறிச்சோடிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்தபோது அதில் ஒரு சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை கண்டுபிடித்தனர். மேலும் அந்த சூட்கேஸில் சிமென்ட் தடித்துப்பூசப்பட்டிருந்ததும், உடல் அழுகாமல் இருக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, டெல்லியில் இருந்து ஓய்வுபெற்ற ஏ.எஸ்.ஐ.யின் மகன் அங்கித் உபாத்யாயா மற்றும் அவரது மனைவி ஷிவானி சர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞர் கிஷோர் பங்க்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்தக் கொலைக்குத் திட்டமிட்ட முதன்மை நபர் அங்கித்தா என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஒரு வழக்கறிஞராக தொழில்புரிந்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் சிசிடிவி பதிவுகளில் உடலை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகளில் சிக்கியுள்ளனர். கொலைக்கு பிறகு இருவரும்  டெல்லி விமான நிலையம் வழியாக தப்ப முயற்சித்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் மாற்றுத்திறனாளியான கிஷோர் பாங்க்ரா என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு ஒரு சக்கர நாற்காலி தேவைப்பட்ட நிலையில் அங்கித் உதவியுடன் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் அவருக்கு 30 லட்ச ரூபாய் மட்டுமே பணம் கிடைத்துள்ளது. மீதி 20 லட்ச ரூபாயை அங்கித் கொடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், பணம் காணாமல் போனது தொடர்பாக வாலிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். இதன் காரணமாக அங்கீத் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து அந்த வாலிபரைக் கொன்று பின்னர் உடலை ஒரு இரும்பு பெட்டியில் வைத்து காரில் கொண்டு சென்று அப்புறப்படுத்தினார்.

இந்த வாலிபரின் உடலை சூட்கேசில்  வைத்து அவர்கள் சிமெண்டால் நிரப்பியுள்ளனர். மேலும் முன்னதாக உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் முஸ்கான் என்பவர் கள்ளக்காதலன் சாகலுடன் சேர்ந்து தன் கணவனை கொன்று உடம்பை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற ட்ரம்மில்  வைத்து சிமெண்ட் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே பாணியில் தற்போதும் உடலை சிமெண்ட் பூசி அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த தம்பதியினரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.