
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் செந்தில் பாலாஜி முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய வைஷ்ணவி உள்ளிட்டோர் திமுகவில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கியுள்ளார்.
அதன்படி மதிமுக மற்றும் அமமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். தற்போது கரூரில் முகாமிட்டுள்ள செந்தில் பாலாஜி மாற்று கட்சியினரை இழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மதிமுக மாவட்ட நிர்வாகி ரவி, பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் சண்முகம், அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் இந்த அதிரடி வேட்டை கரூர் மற்றும் கோவையில் இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது.