
தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மின்விபத்துக்களால் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க மின்விபத்து தடுப்பு பணிக்கு தனி மொபைல் போன் செயலியை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி டான்ஜெட்கோ சேப்டி- உன் பாதுகாப்பு உன் கையில் என்ற மொபைல் போன் செயலி வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.