
மின்சாரத்தை திருடுவதும், அதற்கு துணையாக மின் வயரிங் வேலை செய்வதும் சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியில், பெரும் நிதி இழப்பை விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் உயிருக்கு ஆபத்தான மின்சார விபத்தை விளைவிக்கும்.
கட்டுமான இடங்கள் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட எங்கேயாவது மின்திருட்டு நடந்தால் அதுகுறித்து உடனடியாக https://tnebltd.gov.in/theftonline/petitionentry.xhtml என்ற இணையதளத்திலும், செல்போன் – 9445857591 எண்ணிலும் புகார் அளிக்கலாம்.