திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முகமது குலாம் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அடையாளம் தெரியாத நான்கு பேர் வந்தனர்.

அவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடித்ததை பார்த்த முகமது குலாம் எங்கு மது குடிக்க கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் போதையில் ஆசிரியரை தகாத திட்டி உள்ளனர். அன்று மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் முகமது குலாம் பாடம் நடத்துவதற்காக சென்றார்.

அப்போது மர்ம நபர்கள் தங்கள் மறைத்துக் கொண்டு சென்ற பெட்ரோலை முகமது குலாம் மீது ஊற்றி தீ வைக்க முயன்றனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.