இந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கடந்த மே 23 ஆம் தேதி இருந்து மாயமான நிலையில், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட மூன்று பேர் மீது புகார் பதிவாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய வீடியோவில், சோனம் மற்றும் ராஜா மலையேற்றம் போன்று ஒரு பகுதியிலே நடந்து செல்கிறார்கள். இதுவே அவரது உயிரிழப்புக்கு முன் காட்சியாகவும், திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்கான ஆதாரமாகவும் இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dev (@m_devsingh)

 

மேலும், இந்த வீடியோவின் அடிப்படையில் சோனம், ராஜ் குஷ்வாஹா மற்றும் இன்னொருவர் ராஜாவை கொலை செய்ய முன்வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், ராஜாவை முதலில் விஷால் என்பவர் தாக்கியதாகவும், பின்னர் சோனம் பலமுறை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. ராஜாவின் உடலில்  பல காயங்கள் மற்றும் உடைகளில் ரத்த காயங்கள் இருப்பதால், கொலை மிகக் கொடூரமாக நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராஜாவின் குடும்பத்தினர், இந்த கொலை ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும், இந்த வழக்கில் சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹாவுக்கு போதைப்பொருள் சோதனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். “இவர்கள் வெறும் கூலிகள் தான், உண்மையான சதிகாரர்கள் பின்னணியில் இருக்கிறார்கள்” என ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. மேலும் வெளியான இந்த புதிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.