நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பரபரப்பு….! பள்ளி மாணவர்களிடையே மோதல்…. கத்தியால் குத்தி மாணவர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால்…
Read more“கோயில், குளம் என சுற்றி சாப்பாடு தரல…” என்னை அடிக்க கை ஓங்கியதால்…. மகளை கொன்ற 78 வயது தந்தையின் பரபரப்பு வாக்குமூலம்…!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஜூன்…
Read more