பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது மருதமலை கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை கடுமையாக விமர்சித்தார். அதாவது இன்று மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அது குறித்து பேசிய அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக சாடினார். இது பற்றி அவர் தொடர்ந்து பேசியதாவது, இன்று மருதமலை முருகன் கோவிலில் நடந்தது கும்பாபிஷேகமா.? பக்தர்கள் அனைவரும் மலை பாதைக்கு வெளியே கைகட்டி முருகனை தரிசிக்க காத்திருந்தனர்.

இன்று 750 பேருக்கு சிறப்பு தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அனைத்து டோக்கன்களும் கரைவேட்டி கட்டிய திமுககாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபுவின் மனைவியும் மகளும் ஏதோ சுற்றுலாவுக்கு வந்த போது சும்மா மருதமலையை பார்ப்போம் என்று வந்துள்ளனர். அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அதே சமயம் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்ளவில்லை. திமுக சார்பில் ஒரு அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. அறநிலைறயத்துறை அமைச்சருக்கு இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது.

அவர் இருந்தால்தானே ஏதாவது முக்கிய பிரச்சனை என்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதற்காகத்தான் சொல்கிறோம் அறநிலையத்துறை என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று. கண்டிப்பாக இவர்களை முருகன் தண்டிப்பார். அமைச்சர் சேகர்பாபுவுக்கு முருகன் தண்டனை கொடுப்பார். இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் சென்ற அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினர் வரிசையில் நின்ற பக்தர்களை பின்னுக்கு தள்ளி தகராறு செய்தனர். மேலும் இதையெல்லாம் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.