
பிரான்சில் 300 நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் ஜோயல் லீ ஸ்குவார்நெக் மீதான விசாரணையை அந்த நாட்டு நீதிமன்றம் தொடங்கியுள்ளது . ஜோயல் லீ ஸ்குவார்நெக் கடந்த 1989 முதல் 2014ஆம் ஆண்டு வரை நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், செக் அப்பின் போதும் அத்துமீறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களில் 256 பேர் சிறுவர்கள். பிரான்ஸ் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் வழக்காக இது கருதப்படுகிறது. ஒரு டாக்டர் 300 பேரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.