மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்த மருத்துவரான இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இளங்கோவனின் மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளங்கோவனின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது மனைவியின் மடி மீது தலை வைத்து படுத்தவாறு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளங்கோவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.