
கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேப்போன்று பலமுறை அந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் அந்த சிறுமி இந்த செய்தியை தனது பள்ளி ஆசிரியரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் குழந்தைகள் நல அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் புகாரின் பேரில் செல்வராஜை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி செல்வராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ 10000 ம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.