கடந்த 2014 தான் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளமான பால் ரோசோலி ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்த முடிவெடுத்து ஆபத்தான அமேசான் காடுகளுக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வை பல்வேறு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த டிஸ்கவரி தொலைக்காட்சி தொடர் தயாரித்தது. ஒரு அனகோண்டா உயிருடன் மனிதனை விழுகுவதை அவர்கள் படமாக்க முடிவு செய்தார்கள். இதற்காக பால் ரோசாலி தனக்கான பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டு அனகோண்டாவிற்கு அருகில் சென்றார் .

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அனகோண்டா அவருடைய தலையை விழுங்க தொடங்கியது அடுத்ததாக உடலை சுற்றி வளைத்தது. இதனால் அச்சமடைந்த குழுவினர் பால் ரோசாலி பாதுகாப்பாக மீட்டார்கள். இந்த சம்பவம் குறித்து தற்போது அவர் அந்த பதைபதைக்கும் நொடிகளை குறித்து பேசி இருக்கிறார்.

தனக்கு கடைசியாக நினைவில் இருப்பது அனகோண்டாவின் வாய் அகலமாக திறந்தது என்றும் அடுத்த சில நிமிடங்களில் இருட்டாக மாறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அனகோண்டா தன்னை சுற்றிக் கொண்டதும் விலா எலும்புகள் வெடிப்பதை போல உணர்ந்ததாகவும் கூறிய அவர் ஆக்ஸிஜன் குழாய் பொருத்தி இருந்தாலும் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்ததாகவும்  அவர் பகிர்ந்து உள்ளார்.