சத்தீஸ்கரின் பெமெதாரா மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர்-பிலாஸ்பூர் சாலையில் அமைந்துள்ள டெம்ரி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ஆனால் அவருக்கு உடனடி உதவி அளிக்காமல், அங்கு கூடிய மக்கள் வாகனத்தில் இருந்த கோழிகளை திருடி செயல்வதிலேயே  குறிக்கோளாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாகனம் கவிழ்ந்ததும், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு  கொண்டு செல்ல ஏக்கத்துடன் அந்த வாகனத்திலிருந்த கோழிகளை பிடிக்க தள்ளுமுள்ளாக ஓடி வந்தனர். வாகனத்தின் கதவுகள் திறந்ததும், வெறும் ஒரு சில நிமிடங்களில் 500க்கும் மேற்பட்ட கோழிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

“>

இதில் காயமடைந்த ஓட்டுநருக்கு உதவி செய்யாமல்  மனிதநேயமற்ற செயல் என சமூக ஊடகங்களில் கண்டனக் கருத்துகள் பதிவாகி வருகின்றன. சம்பவத்தின் வீடியோவுகள் சமூக தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் அனைத்து கோழிகளும் முற்றிலும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சட்ட ஒழுங்கு மீறலை மட்டும் காட்டவில்லை, அதேசமயம் சமூக பொறுப்பின்மை எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.