மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதன்படி ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படியானது உயர்த்தப்படும் நிலையில் தற்போது ஊழியர்கள் 53 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அரையாண்டிற்கு இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் மொத்தமாக 55 சதவீத அகவிலை படியை பெறுவார்கள். ‌ இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் மார்ச் 14ஆம் தேதிக்கு முன்பாக இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இரண்டு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மாதம் 18000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு  அகவிலைப்படியானது 9.900 ரூபாயாக உயரும்.